Thursday, November 18, 2010

அக்டோபர் செய்தி 2010

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னீர்ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ....
 13 .10 .2010  அன்று சனிக்கிழமை இரவு 8 . 00 மணியளவில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பாக sjap ன் செயலாளர் Er அமானுல்லாஹ் அவர்கள் வீட்டில் செயற்குழு கூட்டம்  நடைபெற்றது இதில் Er . A .P .அப்துல் காதர் BE  அவர்கள் தலைமை தங்கினார்கள்  Er . பஷீர்  V .N .அலி ஹுசைன் மற்றும் SJAP  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தீர்மானங்கள் :
1 . ஜனாஸா வைப்பதற்கான பிரீஸர் பாக்ஸ்க்கு ரூ 50000 தேவைபடுவதால் நன்கொடை மூலம் ரூ 22000  பெறப்பட்டுள்ளது மேற்கொண்டு பணம் கிடைக்கப் பெற்றவுடன் பிரீஸர் பாக்ஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
2 .சுகாதாரமான முறையில் குர்பானி கொடுப்பது சம்பந்தமாக துண்டு பிரசுரம் வினியோகிப்பது
3 . குர்பானி பங்குத்தொகை என்ற பெயரில் மிக அதிகமான பணம் வசூலிக்கப்பட்டு ஒரு பெரும் வியாபாரம் நடந்து வருவதால் இன்ஷா அல்லாஹ் நம் அமைப்பின் மூலம் நியாயமான முறையில் பங்கு தொகை பெறப்பட்டு குர்பானி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
4 .நம் அமைப்பின் உறுப்பினர் v .N .அலி ஹுசைன் அவர்கள் கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நமது அமைப்பும் சேர்ந்து இன்ஷா அல்லாஹ் இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 
5 .விருந்து வைபங்களில் சப்ளை செய்வதற்கு சுன்னத் ஜமாஅத் கேட்டரிங் சர்வீஸ் (SJCS ) என்று ஏற்படுத்தி விருப்பமுள்ள இளைஜர்கள் அந்நிறுவனத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் வருமானத்தை பணிபுரிபவர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
 
அபுல் காசிம் அவர்கள் துஆ ஓதினார்கள் 
 
துல்ஹஜ் 9 , 1431 
செவ்வாய் 16 .11 .2010                                                                                                                                                                                                     V .S .T .அமானுல்லாஹ் 
                                                                                                                    செயலாளர் SJAP
                                                                                                                 மேலப்பாளையம்
 

Tuesday, November 2, 2010

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை-சென்னை

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை - தென் சென்னை மாவட்டம் சார்பில் 31 .10 . 2010 அன்று மலை 6 .00  மணியளவில் சென்னை கிருஷ்ணாம் பேட்டை பக்கீர் லெப்பை மஸ்ஜித்தில் வைத்து மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதை அல்லாமா அல்ஹாஜ் மு.:ப்தி Dr . சலாஹுத்தீன் முஹம்மது ஐயூப் அஸ்ஹரி காதிரி அவர்கள் தலைமையிலும், பக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலும்  நடைபெற்றது துவக்கவுரையாக அல்ஹாஜ் S .M .கனி சிஸ்தி நூரி அவர்களும் சிறப்புரையாக மெளலவி அபத்தலாயில் அல்லாமா ஹழ்ரத் M .ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M .A அவர்கள் தர்ஜுமா தவறுகளும், விபரீத விளக்கங்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் O .A .முஹம்மது முஹ்யித்தீன் .:பைஜீ பிலாலி அவர்கள் இறைவனும் இறைநேசர்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் செய்யிது முஸ்தபா அலி மிஸ்பாஹி அவர்கள் உருது பயான் செய்தும், மெளலானா மெளலவி ஹழ்ரத் A .முஹம்மது முஸ்தபா மஸ்லஹி உருவமற்ற இறைவன் என்ற தலைப்பிலும் பேசினார்கள் ஆஷிகே ரஸூல் அல்-ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத் பிலாலிஷாஹ் ஜுஹுரி அவர்கள் சிறப்பு பேருரையாற்றினார்கள் மெளலவி M . செய்யிது பிலால் ஆமிரி பையாஜி அவர்கள் நன்றி உரை கூறி கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது.