Sunday, July 10, 2011

மேலப்பாளையத்தில் மறைந்து வாழும் மகான்கள்

மேலப்பாளையத்தில் மறைந்து வாழும் மகான்கள்
 
1 . ஆஷிக் ரசூல் மாமேதை மகான் பஷீர் அப்பா (ரலி)  - கடைய ஜும்மா பள்ளி அருகில் 
 2 . கோஜு முஹமது அப்பா (ரலி)  - புதுமனை பள்ளி வாசல் பள்ளி
3 . மஹ்மூது மௌலானா (ரலி) - புதுமனை பள்ளி அருகில்
4 . ஹாஜி செய்யது முஹமது (ரலி) - பஷீர் அப்பா தர்கா எதிரில்
5 .கம்மஞ்சி ஹஸரத் (ரலி) - கடைய ஜும்மா பள்ளி செல்லும் வழியில்
6 .செய்யது அபூபக்கர் (ரலி) - பஜார் திடல்
7 .மதினா சாஹிப் (ரலி) - இப்ராஹீம் ஷா தங்கள் தைக்கா தெரு
8 .ஷா ஆலம் தங்கள் (ரலி) - முஹமது லெப்பை தெரு
9 .சம்சுதீன் அப்பா (ரலி) -      நவாப் பள்ளி
10 .அஹமது சாஹிப் (ரலி) - நவாப் பள்ளி
11.செய்யது முஹமது அப்பா (ரலி) - நவாப் பள்ளி அருகில்
12 .முஹமது தம்பி (ரலி) - நவாப் பள்ளி அருகில்
13 . முஹமது பாத்திமா (ரலி) - நவாப் பள்ளி அருகில்
14 .கல்வத் கலீபா முஹமது யூசுப் (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
15.மாதிஹூர் ரசூல் வாப்பா (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
16 .ராபியா அம்மா (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
17 .செய்யது முஹமது புஹாரி ஐதுரூஸ் (ரலி) - நைனா மூப்பன் பள்ளி தெரு
18 .சேமர் பெத்தப்பா (ரலி) - நைனா மூப்பன் பள்ளி தெரு
19 .கோட்டார் முஹமது அபுல் காசிம் (ரலி) - தண்டன் லெப்பை தெரு
20  .கோட்டார் ஷாகுல் ஹமீது (ரலி) - தண்டன் லெப்பை தெரு
21 .அப்துல் காதர் சாஹிப் (ரலி) - வாவர் பள்ளி அருகில்
22 .தக்கடி பெத்தப்பா (ரலி) - ஆண்டவர் தெரு
23 .மஸ்தான் சாஹிப் பெத்தப்பா(ரலி)  - வடக்கு தைக்கா தெரு மேற்கு
24 . அப்துர் ரஹ்மான் ஐதுரூஸ் தங்கள (ரலி) - பெரிய தெரு மேற்கு
25 .பூ அலி ஆலிம்ஷா (ரலி) _ கலுங்கு சின்ன மித்தீன் தெரு
26 .பூகோயா தங்கள் (ரலி)    - கலுங்கு சின்ன மித்தீன் தெரு
27 .புலவர் ஷெய்கு மீரான் சாஹிப் (ரலி) - அத்தியடி தெரு கிழக்கு
28 .ரஸாத் பாவா (ரலி) - வாட்டர் டேங்  அருகில்
29 .ஷாகுல் ஹமீது தங்கள் (ரலி) - கருப்பட்டி தெரு
30 .கோஜு முஹமது ஹசன் (ரலி) - வெள்ளை கலீபா சாஹிப் தெரு
31 .கலீபா ஐதுரூஸ் ரிபாய் (ரலி) - வெள்ளை கலீபா சாஹிப் தெரு
32 .அபூபக்கர் பம் (ரலி) - பெரிய கொத்பா பள்ளி அருகில்
33 .ஜைனுல் ஆபுதீன் தங்கள் (ரலி) - L .K .S .தெரு
34 . பக்கீர் முஹமது மஸ்தான் (ரலி) - பெரிய கொத்பா பள்ளிக்கு மேற்கு


 

Thursday, June 16, 2011

மேலப்பாளையத்தின் அன்றைய நிலை

மேலப்பாளையத்தின் அன்றைய நிலை
தொழில் :
இந்த ஊரில் குடியேறிய மக்களில் பெரும்பாலோர் வெளிஊர்வாசிகளே. வடகரை, உடன்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து குடியேறினார்கள் இங்கு பெரும்போலோர் நெசவு தொழில் செய்து வந்தனர் இத் தொழிலில் ஈடுபடும்போது திக்ரு செய்து கொண்டே நெசவு செய்வார்கள் பெண்கள் சில பேர் பீடி ஓட்டும் தொழில் சிலபேர் பீடி சுற்றும் தொழில் செய்துவந்தனர்.
ஒற்றுமை :
அன்றைய மக்கள் தொழுகையை தொழாவிட்டாலும் இறைவனுக்கு பயப்படுவார்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கூட வீட்டில் ஏதாவது விசேசங்களுக்கு அல்லது பெருநாள் போன்ற சந்தோஷமான நாட்களில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் அது மட்டுமல்லாமல் அல்லாஹ் ரசூலுக்காக மன்னித்துவிடு என்று கூறிவிட்டால் எந்த ஒரு பெரிய சண்டை என்றாலும் மன்னித்து விடுவார்கள் மறந்து விடுவார்கள் வாசலில் வந்து தர்மம் கேட்கும் நபர்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுப்பார்கள் கொடுக்க முடியாவிட்டால் கூட மாப் செய்யுங்கள் என கூறுவார்கள் அதாவது மன்னித்து விடுங்கள் என உருது கலந்து பேசுவார்கள். பெருநாள் போன்ற நாட்களிலும் கூட வீணான பொழுதாக ஆக்காமல் அன்றைய நாளில் கூட இறைவனை நினைவு கூறும் நோக்கத்தில் தப்ஸ் எனும் கொட்டடித்து அல்லாஹ், ரஸூல், வலிமார்கள் இவர்கள் மீது பாடல் இயற்றி புகழ்ந்த வண்ணம் கொண்டாடுவார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர் தேசத்தில் இருந்து  வந்ததால் தப்ஸ் அடித்து புகழ்வது  மிசர் தேசத்திலும் அங்குள்ள அராபிய நாடுகளிலும் உள்ள பழக்க வழக்கமாகும்   சினிமா படம் வந்த காலத்திலும் கூட ஊர் ஒன்று கூடி சினிமா பார்க்க கூடாது என தங்களுக்கு தாங்களே தடை செய்து சட்டம் போட்டுக்கொண்டனர் மீறி பார்க்க செல்பவர்களுக்கு அபராதம் போட்டு வந்தனர்  மேலும் மீலாது நபி மற்றும் வலிமார்கள் நினைவு தினங்களை கொண்டாடி மகிழ்வதோடு அல்லாமல் ஊரில் ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் இதில் வசதி உடையவர்கள் அரிசி, பருப்பு, கறி  போன்ற உணவு பொருட்களை கொடுத்து விடுவதால் வீடுக்கு வீடு உணவுக்கு ஆகும் பணத்தை குறைவாக வாங்கி எளியோரும் குறைவான பணத்தில் உயர்ந்த  மணமான உணவை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
 
விளையாட்டுக்கள்
விசேஷமான நாட்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் விளையாடுவார்கள், கபடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வார்கள் பெண்கள் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதாக கூறப்படுகிறது
 
வெளிநாடு போக்குவரத்து
ஆண்கள் பர்மா ரங்கூன் போன்ற இடங்களில் வாணிபம் செய்து வந்தார்கள் அங்குள்ள உணவு இடியப்பம் வட்டிலாப்பம் இது தான் மேலப்பாளையத்தில் இன்றும் உயர்ந்த உணவாக உள்ளது பிறகு மலேசியா சிங்கபூர் செல்ல ஆரம்பித்தார்கள் அங்கு சென்றதால் அங்கு பேசப்படும் மொழிகளையும் கலந்து பேச ஆரம்பித்தார்கள் உதாரணமாக ஓகே என கூறுவது என்றால் ஓகே லா என லா சேர்த்து தான் பேசுவார்கள் இது நம்ம ஊர் பழக்கத்தில் போ அல்லது வா என கூறுவது என்றாலும் போ லா  வா லா என பேசுவதே இதற்க்கு காரணமாக உள்ளது பிறகு 1980 வருடத்திற்கு பிறகு சவூதிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் சவூதி ஏழ்மை நிலையிலிருந்து பெட்ரோல் கிடைக்க பெற்ற பின் சவூதி செழிப்போங்கியது ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர்தேசத்தில் இருந்து கேரளா வழியாக நமது ஊர் வந்தார்கள் இதுபோன்று ஏழ்மை இன் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் நிறையப்பேர் புறப்பட்டுவிட்டனர் மிசர் கட்டுப்பாடில் இருந்த மக்கா மதீனாவும் சவூதிக்கு சேர்ந்து விட்டதால் மிசர் தேசத்திற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மட்டுமே மிஞ்சியது ரியாத்தை தலை நகராக கொண்ட சவூதிக்கு மக்காவும் மதீனாவும் சொந்தமாகிவிட்டது சவூதிக்கு சென்ற நமது ஊர் மக்கள் சவூதி அரபியாவின் கலாச்சாரம்  இவர்களை தொற்றிக்கொண்டது சவூதி செழிப்போங்கிய காரணத்தால் 1400  வருடம் கழித்து சென்ற நம்ம ஊர்வாசிகளுக்கு புதிய கலாச்சாரத்தை பார்த்து இது தான் இஸ்லாமி நாடு என அங்கு சென்று வந்த பிறகு நமது ஊர் மக்களின் பழைய வாழ்க்கை, ஒற்றுமை மறைந்து வருகிறது

தெருக்களுக்கு பெயர் வந்தது எப்படி
ஆங்கில ஆட்சியில் இங்கு குதிரை வீரர்களை ராவுத்தர் என அழைப்பார்கள்  ஆகவே மேலப்பாளையம் ராவுத்தர் தெருவில் குடி இருந்ததால் அந்த தெருவிற்கு ராவுத்தர் தெரு என பெயர் வந்ததாக கூறப்படுகிறது மேலும் பல நல்லோர்கள் வந்து சென்றதாலும், பல நல்லோர்கள் இங்கு வாழ்ந்து மறைந்ததால் அவர்களின் பெயர்களும் தெருவிற்கு பெயராக அமைந்தது

இன்னும் நீங்கள் அறிந்ததை தெரியப்படுத்தவும்

Monday, June 6, 2011

மக்களால் விரட்டப்பட்ட சைத்தான்

 4.11.2011 அன்று டி என் டி ஜே வினர் மேலப்பாளையம் ரஹ்மானியாபுரத்தில் வைத்து கூட்டம் நடத்த முடிவு செய்து மைக் எல்லாம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த முயன்றனர் அந்த தெரு மக்கள் இவர்கள் ஆபாசமாக பேசுவார்கள் என்றும் இவர்களால் தான் சமுதாயம் கெட்டுவிட்டது என்றும் மரியாதை  தெரியாமல் பேசுபவர்கள் என்றும் மக்கள் கூட்டம் நடத்தவிடாமல் விரட்டி விட்டனர்

Friday, March 18, 2011

மீலாது விழா போட்டோ

மீலாது விழா நிகழ்ச்சி போட்டோ
                            த. மோகன் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர்

                         த. மோகன் அவர்கள் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர்
                                                    கண் கண்காட்சியை திறந்து வைத்தார்



 ஊர்வலத்தை துவக்கி வைப்பவர் K .பாஸ்கரன் MABL அவர்கள் (மாநகராட்சி ஆணையாளர்)

                                        முகம்மது நிசார் பிலாலி அவர்கள் பாஜில் ஜமாலி 
                                                                 (முதல்வர் பிலாலியா அரபிக் கல்லூரி)

அல்லாமா, அல் ஆரிப்பில்லாஹ், ஆஷிகே ரசூல், அபுல் அம்ஷால், அஷ்ஷெய்கு 
பிலாலிஷாஹ்  ஜுஹூரி  அவர்கள் ஸ்தாபகர் பிலாலியா அரபிக் கல்லூரி  

Monday, March 7, 2011

பொட்டல்புதூர் கொடியேற்று விழா 6 .03 .2011

6 .03 .2011 அன்று பொட்டல்புதூர் கொடியேற்று விழாவிற்கு 4 சிறப்பு பேருந்துக்களை சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது கூட்டம் அதிகம் என்பதால் மேலும் ஒரு பேருந்து  ஏற்பாடு செய்யப்பட்டு 5 பேருந்துகள் மேலப்பாளையம் நகரிலிருந்து புறப்பட்டது வேன், ஆட்டோ, டாக்சி மற்றும் 50  மேற்பட்ட வாகனங்கள் மேலப்பாளையம் நகரிலிருந்து விழாவிற்கு சென்றது
 
கொடியேற்று விழா இதில் லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் TNTJ வினரே வேன், ஆட்டோ, டாக்சி யில் அழைத்து வந்துள்ளார்கள் வந்ததும் மட்டுமல்லாமல் கொடியேற்றும் இடத்திலும் வந்து நின்றார்கள்

Friday, February 18, 2011

மீலாது ஊர்வலம்

16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில்   V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி சிறப்பான முறையில் நடைபெற்றது 
 
அன்று மாலை 6 .30  மணியளவில்   09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்பட்டது
மெளலவி  N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மிக சிறப்பான ஒரு மார்க்க சொற்பொழிவு செய்தார்கள் இது வஹாபிகளுக்கு சரியான பதிலாக இருந்தது

Sunday, February 13, 2011

௦மேலப்பாளையம் மீலாதுந்நபி விழா

௦மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி சார்பாக 04 .02 .2011 அன்று முதல் மஸ்ஜித் காதிரியா,ரஹ்மானியா ஜும்மா பள்ளி, வடக்கு ஆதி முஹைதீன் பள்ளி, மஸ்ஜித் ஆயிஷா, மஸ்ஜித் அலிய்யா,மாப்பிளை லெப்பை ஆலிம் பள்ளி, நவாப் பள்ளி, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்மா பள்ளி, நாகூர் மீரான் ஜும்மா பள்ளி, வாவர் ஹனபி ஜும்மா பள்ளி, மஸ்ஜித் ஸலாஹ்,  V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளி
ஆகிய பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது
 
16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில்   V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் நடைபெற உள்ளது
 
அன்று மாலை 6 .30  மணியளவில்   09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாநபி அவர்களின் பிறந்த தினமான ரபியுல் அவ்வல் பிறை 12 ல் பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்பட உள்ளது 
அதனை தொடர்ந்து மெளலவி  N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்
 

Wednesday, February 9, 2011

மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி

மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி சார்பாக 09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி நடை பெற்றது இதில் பள்ளிக் கூடம், கல்லூரி மற்றும் மதரசாக்களிலிருந்தும் 335 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 16 .02 .2011 அன்று நடைபெற இருக்கும் மாநபி அவர்களின் பிறந்த தினமான ரபியுல் அவ்வல் பிறை 12 ல் பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்படுள்ளது
 

அண்ணல் நபிகளாரின் 60 பொன்மொழிகள்!!

அண்ணல் நபிகளாரின் 60 பொன்மொழிகள்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் ஐயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.
ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.
இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தவை:
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் நசீபாக்குவாயாக.....