௦மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி சார்பாக 04 .02 .2011 அன்று முதல் மஸ்ஜித் காதிரியா,ரஹ்மானியா ஜும்மா பள்ளி, வடக்கு ஆதி முஹைதீன் பள்ளி, மஸ்ஜித் ஆயிஷா, மஸ்ஜித் அலிய்யா,மாப்பிளை லெப்பை ஆலிம் பள்ளி, நவாப் பள்ளி, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்மா பள்ளி, நாகூர் மீரான் ஜும்மா பள்ளி, வாவர் ஹனபி ஜும்மா பள்ளி, மஸ்ஜித் ஸலாஹ், V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளி
ஆகிய பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது
16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில் V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் நடைபெற உள்ளது
அன்று மாலை 6 .30 மணியளவில் 09 .01 .2011 அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாநபி அவர்களின் பிறந்த தினமான ரபியுல் அவ்வல் பிறை 12 ல் பரிசுகளும் சான்றிதல்களும் வழங்கப்பட உள்ளது
அதனை தொடர்ந்து மெளலவி N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்
No comments:
Post a Comment